அஞ்சல் பொருட்கள் திருப்பி அனுப்பும் சேவை
- அஞ்சலிடப்பட்ட பொருட்கள் முகவரியாளரின் அனுமதியின்றி அனுப்புனருக்கு திருப்பி அனுப்ப முடியும்.
- அஞ்சல் மூலம் அனுப்புதல் என்ற செயல்பாட்டில், அனுப்புனர் அல்லது அவர் மூலம் எழுத்துப்பூர்வமாக அதிகாரத்தை வழங்கிய நபரைத் தவிர வேறு யாருக்கும் பொருட்கள் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது.
- இதற்காக
- அஞ்சல் அமைச்சரின்
- அஞ்சல் அதிபதியின்
- அஞ்சல் அதிபதி மூலம் அங்கீகாரத்தை வழங்கிய அதிகாரி ஒருவரின் அனுமதி கட்டாயமாகும்
( ● இங்கு, அஞ்சல் அதிபதி என்பது பிரதி அஞ்சல் அதிபதியையும் உள்ளடக்கியது.
● அஞ்சல் அதிபதியின் அங்கீகாரத்தை பெற்ற அதிகாரி என்பது பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் மற்றும் அஞ்சல் அத்தியட்சகர் ஆவர். - எந்தவொரு பொருளையும் பெறுவதற்கான விண்ணப்பத்தை அனுப்புநர் அல்லது அவரால் எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நபர் நேரடியாக மேற்கண்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், அது அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் அதிபர் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
- ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் பொருட்களைத் திரும்பக் கோருவதற்கான காரணங்களைக் கூறும் ஆவணம் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆவணம் சீல் வைக்கப்பட்ட உறையில் வைக்கப்பட வேண்டும் என்பதுடன், மேற்கண்ட அங்கீகாரம் அளிக்கப்பட்ட அதிகாரிகளால் மட்டுமே அவை திறக்கப்பட வேண்டும்.
- அஞ்சல் பொருட்கள் தொடர்பாக, கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் போதுமானதாக மற்றும், விண்ணப்பதாரரதால் பொருள் அனுப்பப்பட்டதாகத் திருப்தியடையக்கூடியதாகவும் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் திருப்பி அனுப்புவதற்கான உத்தரவை வழங்குவார்கள். இல்லையெனில், பொருளை விரைவாக அதன் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்..
- இந்த விண்ணப்பத்திற்கான கட்டணம் முத்திரை மூலம் செலுத்தப்பட வேண்டும். இதற்குரிய கட்டணம் ரூ. 50/- ஆகும்.
- வெளிநாட்டு அஞ்சல் பொருட்களைத் திருப்பி அனுப்பும்போது அதற்காகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
- மொத்த அஞ்சல் கட்டணம், சம்பந்தப்பட்ட நாட்டிற்கான பதிவுக் கட்டணம் மற்றும் அஞ்சல் அலுவலகத்திலிருந்து மீளப் பெறுவதற்கான கட்டணம் ரூ. 130/- ஆகும்.
- வெளிநாட்டு அஞ்சல் பொருட்கள் இன்னும் நாட்டில் இருந்தால் மட்டும் ரூ.50/- போதுமானது.
முகவரி மாற்றம் ஏற்பட்டால் இவ்விதிகளை பின்பற்ற வேண்டும்.
